முதல்வர் குறித்து அவதூறு : ஓய்வு டி.ஜி.பி மீது வழக்கு பதிவு

by Staff / 25-11-2023 01:00:34pm
முதல்வர் குறித்து அவதூறு : ஓய்வு டி.ஜி.பி மீது வழக்கு பதிவு

முதல்வர் ஸ்டாலின் குறித்து சமூகவலைதளத்தில் அவதூறு பரப்பியதாக ஓய்வுபெற்ற டிஜிபி ஆர்.நடராஜ் மீது சைபர் க்ரைம் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருச்சி மத்திய மாவட்ட திமுக வழக்கறிஞரணி துணை அமைப்பாளர் ஷீலா திருச்சி எஸ்.பியிடன் புகார் அளித்தார் அதில் கூறியிருப்பதாவது: ஓய்வுபெற்ற டிஜிபி ஆர்.நடராஜ், வாட்ஸ்-அப் குழுவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக செய்தி பதிவிட்டுள்ளார். அதில், ‘‘இந்துக்கள் வாக்களித்துதான் வெற்றி பெற வேண்டுமென்றால், அப்படி ஒரு வெற்றி தேவையில்லை. இந்துக்களின் வாக்குகளைப் பெறும் அளவுக்குதிமுக தரம் தாழ்ந்துவிடவில்லை’’ என்று முதல்வர் கூறியுள்ளதாகவும், அது ஒரு செய்தி சேனலில் வந்துள்ளதாகவும், மேலும், கடந்த 2 ஆண்டுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் தமிழக போலீஸார் ஆதரவுடன் இடிக்கப்பட்டுள்ளதாகவும் பொய் தகவலை பதிவிட்டுள்ளார். என்று கூறப்பட்டிருந்தது. இதனையடுத்து 6 பிரிவுகளில் சைபர் க்ரைம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via