சென்னையில் தேங்கியுள்ள மழைநீரால் கழிவுநீர் குழியில் விழுந்த பெண் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.

by Editor / 02-11-2022 06:27:38pm
சென்னையில் தேங்கியுள்ள மழைநீரால் கழிவுநீர் குழியில் விழுந்த பெண் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மழை நீடிக்கும்  என  சென்னை  வானிலை  ஆய்வு மையம் தெரிவித்துள்ளநிலையில்  மிக கனமழைக்கும்  வாய்ப்புள்ளதாகவும், தமிழ்நாட்டில் ஆரஞ்ச் எச்சரிக்கையையும்  வானிலை ஆய்வு மையம் சார்பில் விடுக்கப்பட்டுள்ளது.இந்தநிலையில்  சென்னையில் தொடர்ந்து 3 வது நாளாக விடிய விடிய மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் சாலைகளில் தண்ணீர் குளம் போல் தேங்கியுள்ளது. சில பகுதிகளில் ஆறாக வெள்ளநீர் ஓடுகிறது.இதன்காரணமாக பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.அந்த வகையில், பெரம்பூர் பகுதி முழுவதும் மழை நீர் சூழ்ந்து காணப்படுகிறது. அந்த பகுதிக்கு சென்ற இளம் பெண் ஒருவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது, பாரக்ஸ் சாலையில் திறந்து கிடந்த பாதாள சாக்கடைக்குள் தவறி விழுந்துள்ளார்.இதனை கண்ட அப்பகுதி மக்கள் அந்த பெண்ணை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து அந்த இளம்பெண்ணை காப்பாற்றினர்.தொடர்ந்து அந்த பெண்ணை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு அவர் பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

 

Tags :

Share via