ரேஷன் கடைகளில்காலிப்பணியிடங்கள்  விரைவில் நிரப்பப்படும் : அமைச்சர் ஐ. பெரியசாமி 

by Editor / 29-07-2021 05:11:21pm
ரேஷன் கடைகளில்காலிப்பணியிடங்கள்  விரைவில் நிரப்பப்படும் : அமைச்சர் ஐ. பெரியசாமி 



ரேஷன் கடைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூரில் கூட்டுறவுத்துறை அதிகாரிகளுடன் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி ஆலோசனை நடத்தினர். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " தமிழகத்தில் கொரோனா கால நிவாரணம் பெறாத பயனாளிகளுக்கு இம்மாத இறுதிக்குள் நிவாரணத்தொகை மற்றும் மளிகை பொருள் வழங்கப்படும்.
கூட்டுறவுத்துறை மூலமாக விவசாயிகளுக்கு நடப்பு வருடத்தில் ரூ.11,500 கோடி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் ரேஷனில் காலியாக உள்ள விற்பனையாளர், பொருள் கொடுப்பவர்கள் உட்பட அனைத்து காலிப்பணியிடமும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

 

Tags :

Share via