சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு இன்று பொது விடுமுறை.

by Editor / 04-12-2023 08:26:48am
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு இன்று பொது விடுமுறை.

கனமழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிவித்துள்ளார். மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு இன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே போல், ராணிப்பேட்டை, விழுப்புரம் மாவட்டங்களிலும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் காலை முதலே கருமேகங்கள் திரண்டுள்ள நிலையில், சாரல் மழை பெய்து வருகிறது. இன்று வழக்கம் போல் பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

 

Tags : சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு இன்று பொது விடுமுறை

Share via