மழை காரணமாக ரத்து செய்யப்பட்ட ரயில்கள்

by Staff / 04-12-2023 05:08:42pm
மழை காரணமாக ரத்து செய்யப்பட்ட ரயில்கள்

சென்னை தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில் செல்லும் சிறப்பு ரயில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. நெல்லை - சென்னை எழும்பூர் இடையேயான வந்தே பாரத் எஸ்பிரஸ் செங்கல்பட்டு வரை மட்டுமே இயக்கப்படும். மறுமார்க்கத்தில் எழும்பூருக்கு பதில் செங்கல்பட்டில் இருந்து வந்தே பாரத் புறப்படும். சென்னையில் இன்று முழுவதும் அனைத்து வழித்தடங்களிலும் மின்சார ரயில்கள் இயக்கப்படாது. சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் மற்றும் எழும்பூர் வரும் ரயில்கள் ரத்து. மங்களூரு, சேலம், திருச்சி, தஞ்சை, நாகர்கோவில், காரைக்கால், மதுரையில் இருந்து சென்னை வரும் ரயில்கள் ரத்து. குருவாயூரில் இருந்து எழும்பூர் புறப்பட்ட ரயில் விழுப்புரத்தில் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via