கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா - பீதியில் மக்கள்

by Staff / 14-12-2023 12:40:34pm
கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா - பீதியில் மக்கள்

சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் குவிந்துவரும் நிலையில் கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய மாநில அரசுகளின் நடவடிக்கைகள் காரணமாக கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் கேரளாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 230 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 949 ஆக அதிகரித்துள்ளது. சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் குவிந்து வரும் நிலையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று மக்களிடையே பீதியை ஏற்படுத்தி வருகிறது.

 

Tags :

Share via