4 மாத கர்ப்பிணி கைக்குழந்தையுடன் தற்கொலை

by Staff / 21-12-2023 01:42:33pm
4 மாத கர்ப்பிணி கைக்குழந்தையுடன் தற்கொலை

கும்மிடிப்பூண்டி அருகே உள்ள பல்லவாடா கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(34). சென்னையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வரும் இவருக்கும், ஆந்திர மாநிலம் மலவார்பாளையம் கிராமத்தை சேர்ந்த விஷ்ணுபிரியா (23) என்பவருக்கும் இடையே கடந்த 3 வருடங்களுக்கு முன் திருமணமாகி பௌதிஷன் என்ற 2 வயது ஆண் குழந்தை உள்ள நிலையில் தற்போது விஷ்ணு பிரியா நான்கு மாத கர்ப்பிணியாக உள்ளார்.
கடந்த 16-ஆம் தேதி நள்ளிரவு ஏற்பட்ட கணவன் மனைவி இடையே ஏற்பட்ட சண்டையில் விஷ்ணுபிரியா கணவன் பாலகிருஷ்ணனை உருட்டு கட்டையால் பலமாக தாக்கிவிட்டு ரத்த காயத்துடன் இருந்த கணவனை அப்படியே விட்டுவிட்டு வீட்டில் வெளிப்புறத்தாழ்பாளை பூட்டிய விஷ்ணு பிரியா அங்கிருந்து கைக்குழந்தை பௌதீஷனுடன் மாயமானார். பாலகிருஷ்ணன் மயக்கத்தில் இருந்து மீண்டு உறவினது செல்போனுக்கு தகவல் அளித்ததன் பேரில் பாலகிருஷ்ணனை மீட்ட உறவினர்கள் விஷ்ணு பிரியாவை கடந்த நான்கு நாட்களாக தேடி வந்தனர்.இந்த நிலையில் வீட்டின் அருகே உள்ள ஆலக்குளத்தில் விஷ்ணு பிரியா மற்றும் கைக்குழந்தை பௌத்தீசன் ஆகியோர் பிணமாக மிதப்பதைக் கண்ட அங்குள்ளவர்கள் பாதிரிவேடு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

 

Tags :

Share via