நாய் கடித்த பெண் தீக்குளித்து தற்கொலை
குளித்தலை அருகே நெய்தலலூரைச் சேர்ந்தவர் ராஜு. மனைவி தனலட்சுமி (28). இவர்களுக்கு யாஷிகா ஸ்ரீ (3) என்ற மகள் உள்ளார். 7 மாதங்களுக்கு முன்பு சாலையில் தனலட்சுமி நடந்து சென்று கொண்டிருந்த போது தெருநாய் கடித்துள்ளது. இதனால் சிகிச்சை பெற்று வந்த தனலட்சுமிக்கு திடீரென்று மனநலம் பாதிக்கப்பட்டு அதற்கும் சிகிச்சை பெற்று வந்தார். இதைத்தொடர்ந்து திருச்சி எடமலைப்பட்டியில் அவரது தந்தை முருகன் வீட்டில் வசிதில் வசித்து வந்தார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண்ணெண்ணெய்யை உடம்பில் ஊற்றி தனலட்சுமி தீக்குளித்தார். அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, தனலட்சுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
Tags :