அரசு மருத்துவமனையில் நோயாளி கழுத்தை அறுத்து தற்கொலை
சேலம் மணக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன் மனைவியை பிரிந்து வசித்து வந்தார். சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்த அவர் காலில் புண் ஏற்பட்டதையடுத்து. சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது அண்ணன் உடன் இருந்து கவனித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் குடும்ப பிரச்சனை மற்றும் உடல் பாதிப்பு போன்றவற்றால் மன உளைச்சலால் அவர் இருந்து வந்ததாகவும் தெரிகிறது. இந்த நிலையில் நேற்று இரவு போர்வையை போர்த்திக்கொண்டு தனக்கு தானே கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தபோது அவர் உயிருக்கு போராடியது தெரிய வந்தது. மருத்துவர் விரைந்து வந்து சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் உயிரிழந்தார். மருத்துவமனை சிகிச்சை வார்டிலே சர்க்கரை நோயாளி கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags :