திமுக எம்.பியை கண்டித்த பீகார் துணை முதல்வர்

by Staff / 24-12-2023 03:19:07pm
திமுக எம்.பியை கண்டித்த பீகார் துணை முதல்வர்

இந்தி மட்டும் தெரிந்ததால்தான், உத்திரபிரதேசம், பீகார் மக்கள் தமிழ் நாட்டிற்கு வந்து தமிழைக் கற்றுக்கொண்டு கட்டிடம் கட்டவும், சாலையைப் பெருக்கவும், டாய்லெட் கழுவவும் செய்கிறார்கள் என திமுக எம்.பி. தயாநிதி மாறன் பேசிய வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. இந்நிலையில், கருணாநிதி அவர்களின் கட்சியான திமுக, சமூக நீதியை நம்புகிறது. அந்தக் கட்சியிலிருக்கும் ஒரு நபர், உத்திரபிரதேசம், பீகார் மக்கள் குறித்து அவ்வாறு பேசியிருந்தால் அது கண்டிக்கத்தக்கது என பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார். மேலும் நாங்கள் அதை ஒரு நாளும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என அவர் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via