தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெள்ளந்தியான ஒரு மனிதர் ஒரு நல்ல மனிதர் பாரபட்சம் இல்லாமல் பழகக்கூடிய ஒரு நபர்.

by Editor / 28-12-2023 03:45:00pm
தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெள்ளந்தியான ஒரு மனிதர் ஒரு நல்ல மனிதர் பாரபட்சம் இல்லாமல் பழகக்கூடிய ஒரு நபர்.

புதுச்சேரி தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்களின் சென்னை விமான நிலைய பேட்டி:

தெலுங்கானாவில் இருந்தேன்.அவருடைய மரணத்தைப் பற்றி நான் கேள்விப்பட்டதும் என்னால் எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளும்  மனநிலையின்மையில் நான் இல்லை. குடும்பத்தில் ஒரு சகோதரரை இழந்தது போல் ஒரு எண்ணம், உணர்வு.ஒரு வெளிப்படையான மனிதர் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஒரு வெள்ளந்தியான ஒரு மனிதர் ஒரு நல்ல மனிதர் பாரபட்சம் இல்லாமல் பழகக்கூடிய ஒரு நபர் ஒரு வானத்தைப்போல மனம் படித்த மன்னவனே நல்லவனே அந்த பாடல் கூரிய வரிகள் அல்ல அவருக்குரிய வரி அவருக்குரிய பாடலாக நான் எடுத்துக் கொள்கிறேன். உடல் நலம் மட்டும் ஒத்துழைத்திருந்தால் அவர் பல உயரங்களை அடைந்திருப்பார். ஆழ்ந்த இரங்கலை நான் தெரிவித்துக் கொள்கிறேன். அவரின் குடும்பத்தாருக்கும் அவர்களின் தொண்டர்களுக்கும் அவரின் இழப்பை தாங்குகிற அளவிற்கு இறைவன் தைரியத்தை மனநிலைமையை கொடுக்க வேண்டும். மிக நெருக்கமான ஒருவரை இழந்ததைப் போல் நான் உணர்கிறேன்.  நான் சினிமாவை அதிகம் பார்த்ததில்லை அவரை ஒரு அரசியல்வாதியாக தான் நான் பார்க்கிறேன் அவர் அரசியலும் அதே அரசியல் அவருக்கு பல இன்னல்களையும் கொடுத்ததையும் பார்த்துள்ளேன்.நான் அவர் சினிமாவில் போலீஸ்காரராக அரசியல்வாதியாக சமூக ஆர்வலராக பல வேடங்களில் நடிப்பதாக கேள்விப்பட்டிருக்கேன். அவருடைய வேடங்களில் அரசியலுக்கு பெரிதும் உதவியது. எனக்கு அரசியலில் பிடித்தது விஜயகாந்த ஆனால் அவர் வேறுபட்ட அரசியல்வாதியாக இருந்தார். வெளிப்படையான அரசியல்வாதி அனைவரையும் எளிமையாக அணுகக்கூடிய அரசியல்வாதி அனைவருக்கும் மரியாதை கொடுக்கக்கூடிய அரசியல்வாதி. அவர் திரை உலகில் மட்டும் நட்சத்திரமாக திகழவில்லை அரசியல் களத்தில் நட்சத்திரமாக திகழ்ந்தார். எனக்கு அவரிடம் பிடித்தது மிக எளிமை மற்றும் சகோதரத்துவம் மிக வெளிப்படையாக பேசுவார் கருத்து தவறாக இருந்தாலும் வெளிப்படையாக பேசுவார். அதுவே அவருக்கு எதிராக போய் சேரும் அதையும் நான் பார்த்திருக்கிறேன். ஒரு மனிதன் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று உணர்ந்து பணியாற்றிய மனிதனாக நான் அவரைப் பார்க்கிறேன் இது அவரின் தனித்தன்மை என்று நான் கூறுவேன். அவரின் தொண்டர்கள் சமீபத்தில் நடந்த பொதுக்குழுவில் அவரை பார்க்கும்போது மிகுந்த உற்சாகத்தில் இருந்தனர். தொண்டர்கள் அவருடைய இழப்பை தாங்க கூடிய அளவிற்கு மனம் படைக்க வேண்டும் என்பதை தான் நான் இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும் வேறு ஒன்றும் இல்லை சொல்வதற்கு இவ்வாறு தெலுங்கானா புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.

 

Tags : தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெள்ளந்தியான ஒரு மனிதர் ஒரு நல்ல மனிதர் பாரபட்சம் இல்லாமல் பழகக்கூடிய ஒரு நபர்.

Share via