மூன்றரை லட்சத்தை தின்று ஏப்பமிட்ட நாய்

by Staff / 05-01-2024 03:30:08pm
மூன்றரை லட்சத்தை தின்று ஏப்பமிட்ட நாய்

நாம் செல்லமாக வளர்ந்துவரும் செல்லப்பிராணிகள் அவ்வப்போது நமக்கு செலவு இழுத்து வைப்பது இயல்பே. ஆனால் இங்கு ஒருவருக்கு வித்தியாசமான முறையில் அந்த செலவு நடந்துள்ளது. அதாவது, அமெரிக்காவின் பென்சில்வேனியாவை சேர்ந்த தம்பதி கிளேட்டன் - கிளேரி லா. இவர்கள் செல்லமாக வளர்த்து வரும் நாயின் பெயர் செசில். இந்நிலையில் இவர்கள் வீட்டை சுற்றி வேலி அமைந்ததற்கு ஒப்பந்ததாரருக்கு குடுக்க வைத்திருந்த 4 ஆயிரம் அமெரிக்க டாலரை (இந்திய மதிப்பில் ரூ.3.32 லட்சம்) வளர்ப்பு நாய் செசில் வாயால் மென்று தின்று கிழித்து எறிந்த சம்பவம் நடந்துள்ளது. இருந்தும் அந்த நாயை அவர்கள் துன்புறுத்தாமல் மருத்துவமனை அழைத்து சென்றுள்ளனர்.

 

Tags :

Share via