"அதிமுகவில் இருந்து விலகமாட்டேன்"- முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன்

by Editor / 02-08-2021 02:16:17pm

முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன். அதிமுக ஆட்சியில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சராக பதவி வகித்த இவர் அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளராகவும் உள்ளார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஆவடி தொகுதியில் போட்டியிட்ட பாண்டியராஜன் திமுக வேட்பாளர் நாசரிடம் தோல்வியை தழுவினார்.

அண்மையில் தான் நடத்திவரும் நிறுவனத்தின் நிறுவன பணிகளை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்த அவர் ஐந்து ஆண்டுகளுக்கு தொழிலில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளேன். அரசியலுக்கு கொஞ்சம் ஓய்வு அளிக்க உள்ளேன்; அதே நேரத்தில் அதிமுகவில் உள்ள பொறுப்புகளை தொடர்வேன் என்று கூறினார். ஆனால் பாண்டியராஜன் அதிமுகவில் இருந்து விலகுவதாக தகவல்கள் பரப்பப்பட்டன

இந்நிலையில் திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது பேசிய அவர், உள்ளாட்சி தேர்தலில் நிச்சயமாக ஆவடி மாநகராட்சி சேர்மன் பதவியை அதிமுக கைப்பற்றும். தொழில் ரீதியாக தனக்கு ஒரு நிறுவனம் உள்ளது. அதில் தனக்கு உயர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஐந்து வருடங்களுக்கு கட்சியை விட்டு ஒதுங்கிக் கொள்வதாக தவறாக சிலர் புரிந்து கொண்டுள்ளனர். என் உயிர் மூச்சு உள்ளவரை அதிமுகவில் இருந்து நாம் விலகி விட மாட்டேன் என்றார்.

 

Tags :

Share via