குப்பையில் வீசப்பட்ட குழந்தைகளின் உடல்கள்

by Staff / 14-01-2024 04:39:07pm
குப்பையில் வீசப்பட்ட குழந்தைகளின் உடல்கள்

உத்தரபிரதேச மாநிலம் ஷாம்லியில் சமீபத்தில் அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. ஜலாலாபாத் புறவழிச்சாலையில் சாலையோரம் குப்பையில் சமீபத்தில் பிறந்த இரண்டு குழந்தைகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. பிரசவத்தை அடுத்து, அடையாளம் தெரியாத நபர்கள், சிசுக்களின் சடலங்களை வீசிவிட்டுச் சென்றுள்ளனர். சில உள்ளூர் மருத்துவமனைகளில் வெளிப்படையாகவே கருக்கலைப்பு செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. குழந்தைகளின் உடலை கைப்பற்றிய போலீசார் குழந்தையின் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

Tags :

Share via