சோழவந்தான் அருகே பிரபல ரவுடி சரமாரியாக வெட்டி கொலை.
மதுரை காளவாசல் பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் ( 28) என்பவர் செக்கானூரணி அருகே ஊத்துப்பட்டி என்ற இடத்தில் நடைபெற்ற கிடா முட்டு சந்தைக்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பும் வழியில் தேனூர் டாஸ்மாக் அருகே இருசக்கர வாகனத்தில் நண்பருடன் வந்து கொண்டிருந்தார்.அப்போது இவரை பின்தொடர்ந்த மர்மக்கும்பல் காரில் வந்து இருசக்கர வாகனம் மீது மோதியதில் இருசக்கர வாகனம் கீழே விழுந்தது.
அப்போது பிரபல ரவுடியான பிரசாந்த் தப்பி ஓட அருகில் உள்ள தோட்டத்தில் ஓடி உள்ளார். இவரை விரட்டி சென்ற மர்ம கும்பல் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் சரமாரி வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர். இவருடன் வந்த ராகுல் தடுமாறி விழுந்ததில் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.இதுகுறித்து சமயநல்லூர் காவல் உதவி கண்காணிப்பாளர் பாலசுந்தரம் சோழவந்தான் காவல் ஆய்வாளர் பால்ராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பட்டப் பகலில் டாஸ்மாக் கடை எதிரில் பிரபல ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags :