இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

by Staff / 18-01-2024 02:23:24pm
இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

தூத்துக்குடி இந்திராநகா் பகுதியைச் சோ்ந்தவா் பேச்சிமுத்து. இவரது மனைவி சிவபாா்வதி (24). தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இந்நிலையில், சிவபாா்வதி நேற்று திடீரென வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாராம். அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.  அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via