சந்திராயனை தொடர்புகொண்ட நாசா

by Staff / 23-01-2024 05:45:43pm
சந்திராயனை தொடர்புகொண்ட நாசா

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட சந்திராயன் 3 விண்கலத்தின் மூலம் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக அங்கு நிலைநிறுத்தப்பட்டது. அதனுடன் நாசாவின் விண்கலம் கடந்த டிச.12 அன்று தொடர்புகொண்டதாகக் கூறப்பட்டது. தற்போது அதை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனா். நாசா ஆா்பிட்டருக்கும் விக்ரம் லேண்டருக்கும் இடையில் 100 கி.மீ தொலைவு இருக்கும்போது இந்தத் தொடர்பு நிகழ்ந்துள்ளது. இந்தத் தொர்பானது எதிர்கால ஆய்வுகளுக்குப் பயன்படும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via