பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து - 2 பேர் பலி

by Staff / 24-01-2024 12:59:39pm
பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து - 2 பேர் பலி

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. வெடி விபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். ஆர்.ஆர்.நகரில் உள்ள பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில், 3 அறைகள் தரைமட்டமாகின. காளிராஜ், வீராக்குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகளில் தீயணைப்புத் துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். வெடி விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

 

Tags :

Share via