ஜாமீனில் வெளியே வந்தார் நடிகை ஜெயலெட்சுமி

by Staff / 23-02-2024 12:01:25pm
ஜாமீனில் வெளியே வந்தார் நடிகை ஜெயலெட்சுமி

பாடலாசிரியர் சினேகன் தனது சினேகம் பவுண்டேஷன் என்ற அறக்கட்டளை பெயரில் நடிகையும், பாஜக நிர்வாகியுமான ஜெயலட்சுமி பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டு வருவதாக கடந்த 2022-ம் ஆண்டு காவல் நிலையத்தில் சினேகன் புகார் அளித்தார். இது தொடர்பாக ஜெயலட்சுமி வீட்டில் சோதனை செய்த போலீசார் அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் ஜெயலட்சுமிக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது- இதையடுத்து அவர் நேற்று மாலை புழல் சிறையில் இருந்து வெளியே வந்தார். மேலும் தனக்காக பிராத்தனை செய்தவர்களுக்கு நன்றி என கூறியுள்ளார்.

 

Tags :

Share via