உலகின் முதல் ஏறுதழுவுதல் அரங்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கீழக்கரை கிராமத்தில் தமிழ்நாடு அரசின் சார்பாக 66. 80 ஏக்கர் நிலப்பரப்பில் 77, 683 சதுர அடி பரப்பளவில் ரூபாய் 62. 78 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்ட உலகின் முதல் ஏறுதழுவுதல் அரங்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார் வாடிவாசலில் காளைகளை அடக்குவதற்கு தயாராக நின்ற இளைஞர்களுக்கு போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் அமைச்சர்கள் ஏவா வேலு கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் பழனிவேல் தியாகராஜன் ஐ பெரியசாமி மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 500க்கு மேற்பட்ட காளைகள் அறுநூறு மாடுபிடி வீரர்கள் போட்டியில் கலந்து கொள்ள உள்ளனா்.முதல் சுற்று நிறைவு.
Tags :