காலம் கடந்து கொடுக்கப்பட்ட விருது: பிரேமலதா விஜயகாந்த்

by Staff / 26-01-2024 05:01:14pm
காலம் கடந்து கொடுக்கப்பட்ட விருது: பிரேமலதா விஜயகாந்த்

விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கும் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, விருது காலம் கடந்து கொடுக்கப்பட்டுள்ளதாக வருத்தம் தெரிவித்தார். அவர் உயிரோடு இருக்கும்போதே விருது கொடுத்திருந்தால் மகிழ்ச்சியோடு வாங்கியிருப்போம் என்று பிரேமலதா விஜயகாந்த் பேட்டியில் பேசினார். டிசம்பர் 28ஆம் தேதி விஜயகாந்த் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via