மைனர் பெண்ணை கடத்தி திருமணம் செய்து வாட்ஸ் அப்பில் பதிவிட்ட மூவர் சிறையில் அடைப்பு.

by Editor / 29-01-2024 09:25:38am
மைனர் பெண்ணை கடத்தி திருமணம் செய்து வாட்ஸ் அப்பில் பதிவிட்ட மூவர் சிறையில் அடைப்பு.


கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சாமல்பட்டி காந்தி நகர்  ஓட்டுனராக பணிபுரிந்து வந்த பூவரசன் என்பவர், சாமல்பட்டி பகுதியை சேர்ந்த மைனர் பெண்ணை கடத்திச் சென்றதாக சாமல்பட்டி காவல் நிலையத்தில் 24 ஆம் தேதி  பெண்ணின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்..

 இதனிடையே பூவரசன் அந்த மைனர் பெண்ணை அருகிலிருந்த சென்றாய பெருமாள் கோவிலில் மணமுடித்து மாலை அணிந்த படி இருக்கும் புகைப்படம் வாட்ஸ்அப்பில் வெளியாகி பரப்பானது..இதனால் ஆத்திரம் அடைந்த பெண்ணின் உறவினர்கள் கடந்த 27 ஆம் தேதி மாலை சாமல்பட்டி காவல் நிலையம் முன்பு சாலை மறியல் ஈடுபட்டனர் அதனை அடுத்து  சாமல்பட்டி காவல் துறையினர்  கடத்திச் செல்லப்பட்டதாக கூறப்பட்ட பூவரசன் மற்றும் அவனுக்கு உடந்தையாக செயல்பட்ட அவனது தாய் ஆனந்தி அவருடன் பூவரசனின் பெரியப்பா ராஜா ஆகியோரை சாமல்பட்டி காவல்துறையினர் கீழ்க்கண்ட பிரிவின் அடிப்படையில்U/s 366,506(i) IPC @ 9 of child marriage Act 2016 and 5(i) r/w 6 of The protection of children from sexual offence Act 2012 r/w 109,212 IPC வழக்கு பதிவு செய்து கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பூவரசன் மற்றும் ராஜா ஆகியோரை கிருஷ்ணகிரி கிளை சிறையிலும், ஆனந்தியை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்

 

Tags : மைனர் பெண்ணை கடத்தி திருமணம்

Share via