சாலையோர உணவக பெண்மணிக்கு உதவிய முதலமைச்சர் ரேவந் ரெட்டி
சமூகவலைதளம் மூலம் பிரபலமடைந்த குமாரி ஆண்டி ஹைதராபாத்தில் மாதப்பூர் பகுதியில் சாலையோரம் உணவு கடை ஒன்றை வைத்துள்ளார். இது மிகவும் பிரபலமாகும். சமூகவலைதளத்தில் மூலம் பிரபலமடைந்த இந்த சாலையோட உணவகத்திற்கு சினிமா பிரபலங்களும் அவ்வப்போது வருவதுண்டு. இந்நிலையில் இந்த கடைக்கு வரும் கட்டுக்கடங்காத கூட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது என எழுந்த புகாரின் பேரில் இந்த கடையை மூட போக்குவரத்துக்கு போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இந்த செய்தியை அறிந்த தெலங்கானா முதலமைச்சர் ரேவந் ரெட்டி இதில் தலையிட்டு உத்தரவை திரும்பபெரும்படி டிஜிபி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகத்துக்கும் உத்தரவிட்டுள்ளார்.
Tags :