மன்னிப்பு கேட்ட மார்க் ஜுக்கர்பெர்க்

by Staff / 01-02-2024 02:24:16pm
மன்னிப்பு கேட்ட மார்க் ஜுக்கர்பெர்க்

மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் மன்னிப்பு கேட்டுள்ளார். சமூக ஊடக தளங்களில் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த அமெரிக்க செனட் விசாரணையின் நடுவில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் எழுந்து நின்று மன்னிப்பு கேட்குமாறு கேட்டுக் கொண்டனர். குழந்தைகளுக்கு சமூக ஊடகங்களால் ஏற்படும் அபாயகரமான தாக்கத்தை தடுக்க போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று ஜூக்கர்பெர்க் மீது சட்ட வல்லுநர்கள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இதனால் அவர் மன்னிப்பு கூறியுள்ளார். டிக்டாக், எக்ஸ், டிஸ்கார்ட் மற்றும் ஸ்னாப்சாட் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் மெட்டாவுடன் பங்கேற்றனர்.

 

Tags :

Share via