ஹேமந்த் சோரன் வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

by Staff / 02-02-2024 12:08:31pm
ஹேமந்த் சோரன் வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

அமலாக்கத்துறை கைது செய்ததற்கு எதிராக ஜார்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தொடர்ந்த வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. ஜார்கண்ட் மாநில முதலமைச்சரை எந்த ஒரு ஆதாரமும், நியாயமும் இன்றி கைது செய்யப்பட்டு இருக்கிறார் என ஹேமந்த் சோரன் தரப்பு வாதிட்டது. ஜாமீன் தொடர்பாக ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தை நாட ஹேமந்த் சோரன் தரப்பிற்கு உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு அறிவுறுத்தியுள்ளது‌.

 

Tags :

Share via