முன்னாள் முதல்வருக்கு கொரோனா

by Staff / 03-02-2024 01:22:18pm
முன்னாள் முதல்வருக்கு கொரோனா

ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பதும் மருத்துவ அறிக்கையில் தெரியவந்துள்ளது. உடல்நிலை குறித்து 'எக்ஸ்'-ல் தெரிவித்த அவர், காய்ச்சல் தீவிரமடைந்ததால், மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருத்துவ பரிசோதனை செய்ததில், கோவிட் மற்றும் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளேன் என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via