மருத்துவமனையில் வைத்து பெண் பலாத்காரம் - பாதிரியார் கைது
கேரளாவின் இடுக்கி அருகே செறுதோணியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் குற்றவாளியை இடுக்கி மகளிர் போலீசார் கைது செய்தனர். பரத்தோடு மாங்குழியில் குஞ்சுமோன் (50) என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் பெந்தேகோஸ்தே தேவாலயத்தில் போதகராக இருந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர். பரத்தோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளம்பெண்ணை அவர் பலாத்காரம் செய்ததாக பெண் காவல் ஆய்வாளர் சுமதி கூறினார். குற்றவாளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
Tags :