பிச்சையெடுத்து ரூ. 2.5 லட்சம் சம்பாதிக்கும் பெண்

by Staff / 13-02-2024 04:34:28pm
பிச்சையெடுத்து ரூ. 2.5 லட்சம் சம்பாதிக்கும் பெண்

மத்திய பிரதேசம், இந்தூரை பிச்சைக்காரர்கள் இல்லாத நகரமாக மாற்றுவதற்கான நடவடிக்கையில் அம்மாவட்ட நிர்வாகம் களமிறங்கியுள்ளது. அப்போது யாசகம் பெரும் ஒரு பெண்ணை பிடித்து விசாரித்தபோது அவர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து பிச்சை எடுப்பதும், தனது குழந்தைகளை பிச்சையெடுக்க கட்டாயப்படுத்துவதும் தெரியவந்துள்ளது. மேலும் 45 நாட்களில் 2.5 லட்சம் ரூபாய் பிச்சையெடுப்பதன் மூலம் வருமானமாக கிடைக்கிறது என அப்பெண் கூறியுள்ளார். மேலும் கைது செய்யும்போது 7 நாள் வருமானமாக அப்பெண்ணின் கையில் ரூ. 19,200 இருந்துள்ளது.

 

Tags :

Share via