21 ஆயிரம் போலி மருந்துகள் - அரசு மருத்துவமனைகளில் அதிர்ச்சி

by Staff / 03-02-2024 05:07:29pm
21 ஆயிரம் போலி மருந்துகள் - அரசு மருத்துவமனைகளில் அதிர்ச்சி

மகாராஷ்டிர மாநிலத்தில் போலி மருந்துகள் தயாரித்து அரசு மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கப்பட்ட மோசடி அம்பலமாகியுள்ளது. பல கோடி ரூபாய் மதிப்புள்ள பாக்டீரியா தொற்றுகளுக்கு சிகிச்சை அளிக்க பரிந்துரைக்கப்படும் மாத்திரைகளின் போலிகள் விநியோகமாகியுள்ளது . நாக்பூர் அரசு மருத்துவமனையில் மட்டுமே சுமார் 21 ஆயிரம் போலி ஆன்டிபயாடிக் மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு அரசு ஒப்பந்த முறை மூலம் அரசு மருத்துவமனைக்கு மருந்து வாங்கப்பட்டதில் மோசடி நிகழ்ந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

Tags :

Share via