இன்று தி.மு.க -ம.தி.மு.க தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தி.மு.க -,,காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ள நிலையில், இன்று காலை 11 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க -ம.தி.மு.க தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.. தொடர்ந்து, இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளுடனும் திமுக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. தி.மு.கவுடனான இன்றைய முதற் கட்ட பேச்சுவார்த்தையில், ம.தி.மு.க 6 தொகுதிகளுக்கான விருப்பப் பட்டியலை வழங்கவுள்ளதாகவும். அதில், விருதுநகர், ஈரோடு, திருச்சி, காஞ்சிபுரம் உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட அக்கட்சி விரும்புவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Tags :