இது அரசாங்கமா..? வட்டிக்கடையா..?  விமர்சித்த ராகுல்காந்தி

by Admin / 21-07-2021 02:53:24pm
இது அரசாங்கமா..? வட்டிக்கடையா..?  விமர்சித்த ராகுல்காந்தி



மத்திய அரசை கடுமையாக விமர்சித்த ராகுல்காந்தி...இது அரசாங்கமா? அல்லது பழைய இந்தி படங்களில் வரும் பேராசை பிடித்த வட்டிக்கடைக்காரரா? என மத்திய அரசை ராகுல் காந்தி சாடியுள்ளார்.பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி கடந்த நிதியாண்டில் கடுமையாக உயர்த்தப்பட்டது.

அதனால், கடந்த நிதியாண்டில், கலால் வரி வருவாய் 3 லட்சத்து 35 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்து இருப்பதாகவும், இது முந்தைய நிதியாண்டை விட 88 சதவீதம் அதிகம் என்றும் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.  ந்தநிலையில், இச்செய்தியை சுட்டிக்காட்டி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார்.அதில், ஒருபுறம் மத்திய அரசு மக்களை கடன் வாங்க தூண்டுகிறது எனவும், மறுபுறம், வரிகொள்ளை மூலமாக சரமாரியாக சம்பாதித்து வருகிறது எனவும் பதிவிட்டுள்ளார்.


இது அரசாங்கமா? அல்லது பழைய இந்தி படங்களில் வரும் பேராசை பிடித்த வட்டிக்கடைக்காரரா? என்றும் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.

 

Tags :

Share via