தென்காசியில் 4 வயது சிறுவன் 12 கிலோமீட்டர் தூரம் இடைவிடாது ஸ்கேட்டிங் மூலம் கடந்து புதிய உலக சாதனை படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

by Staff / 04-02-2024 01:57:44pm
தென்காசியில் 4 வயது சிறுவன் 12 கிலோமீட்டர் தூரம் இடைவிடாது ஸ்கேட்டிங் மூலம் கடந்து புதிய உலக சாதனை படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

தென்காசியில் 4 வயது சிறுவன் புதிய உலக சாதனை முயற்சியில் ஈடுபடும் நிகழ்ச்சி நடைபெற்றது. தென்காசி பள்ளியில் UKG படித்து வரும் மகாதேவ் யாதவ் என்ற 4 வயது சிறுவன் 12 கிலோ மீட்டர் தூரத்தை தொடர்ச்சியாக ஸ்கேட்டிங் மூலம் கடந்து உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டார்.குத்துக்கல்வலசை பகுதியில் நடைபெற்ற உலக சாதனை நிகழ்ச்சியை சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் பரிசுகள் வழங்கினார்.குத்துக்கல்வலசை பகுதியில் இருந்து பண்பொழி, கணக்குப்பிள்ளை வலசை சாலையில் இடைவிடாது தொடர்ந்து 12 கிலோமீட்டர் ஸ்கேட்டிங் செய்து சாதனை படைக்கும் சிறுவனை பெற்றோர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என ஏராளமான உற்சாகப்படுத்தினர்.

 

Tags :

Share via