தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட காவலர் பணியிடை நீக்கம்.

by Editor / 04-02-2024 08:18:59pm
தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட காவலர் பணியிடை நீக்கம்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த 27ம் தேதி அடுத்தடுத்து 2 பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட செட்டிபாளையம் தலைமைக் காவலர் சபரிகிரி என்பவரை போலீஸார் கைது செய்தனர்.விசாரணையில் அவர் செட்டிபாளையம் பகுதியிலும் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட சபரிகிரி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.இந்த நிலையில், சபரிகிரியை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவிட்டுள்ளார்.

 

Tags : தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட காவலர் பணியிடை நீக்கம்.

Share via