அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 11ஆம் தேதி திருப்பூர் வருகை

by Staff / 06-02-2024 01:56:38pm
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 11ஆம் தேதி திருப்பூர் வருகை

திருப்பூர் மாநகராட்சி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 4வது குடிநீர் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. தினமும் 196 எம்.எல்.டி. அளவு குடிநீரை சுத்திகரிப்பு செய்து மாநகர மக்களுக்கு வழங்கும் வகையில் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. புதிய கூட்டுக் குடிநீர் திட்டத்தின் தொடக்க விழா வருகிற 11ஆம் தேதி திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடக்கிறது. இந்த விழாவில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு ஆகியோர் கலந்து கொண்டு புதிய குடிநீர் திட்டத்தை தொடங்கி வைக்கவுள்ளனர். மேலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்டு தயாராக உள்ள டவுன்ஹால் மாநாட்டு அரங்கையும் திறந்து வைக்கவுள்ளார்.

 

Tags :

Share via