அரசுப் பேருந்தை திருடிய ஆசாமிகள்

by Staff / 22-02-2023 02:46:43pm
அரசுப் பேருந்தை திருடிய ஆசாமிகள்

ரயில் தண்டவாளங்கள், செல்போன் டவர்கள் திருடும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. அந்த வகையில், அரசுப் பேருந்தை மர்ம ஆசாமிகள் சிலர் கடத்திச் சென்றனர். கர்நாடக அரசு போக்குவரத்து கழக பேருந்து ஒன்று திருடப்பட்டது. திங்கள்கிழமை இரவு கலபுரிகி மாவட்டத்தில் உள்ள சிஞ்சோலி பேருந்து நிலையத்தில் பிதர் பணிமனையில் பேருந்து நிறுத்தப்பட்டிருந்தது. செவ்வாய்க்கிழமை காலை மர்ம நபர்களால் பேருந்து கடத்தப்பட்டது. இந்த பேருந்தை அதிகாரிகள் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

 

Tags :

Share via