ஒரே நாடு ஒரே தேர்தல் அவசியம் தான் - தளவாய் சுந்தரம்
ஒரே நாடு ஒரே தேர்தல் அவசியம் தான் என அதிமுக எம்எல்ஏ தளவாய் சுந்தரம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் அரசினர் தனித்தீர்மானம் மீது பேசிய அவர், 'நாட்டின் நலன் கருதி செலவுகளைக் குறைப்பது போன்ற அனைத்தையும் கருத்தில் கொள்ளும்போது, ஒரே நாடு ஒரே தேர்தல் அவசியம்தான். இது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்டக் குழுவிடம் 10 கோரிக்கைகளை அதிமுக சார்பில் வழங்கியுள்ளோம். அந்த கோரிக்கைகளை நிறைவேற்றும் பட்சத்தில், அதிமுக ஆதரவு அளிக்கும். தொகுதி மறுவரையறை செய்வதற்கு கொண்டுவரப்பட்ட தனித் தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு அளிக்கிறது' என்று கூறினார்.
Tags :