மனைவி தலையை வெட்டி டீக்கடைக்கு சென்ற கணவன்..

by Staff / 15-02-2024 12:31:10pm
மனைவி தலையை வெட்டி டீக்கடைக்கு சென்ற கணவன்..

மேற்குவங்க மாநிலம், கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள பதாஷ்பூரில் புதன்கிழமை அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. கவுதம் குசைத் என்ற இளைஞர் தனது மனைவி புல்ராணி குசைத்துடன் பல ஆண்டுகளாக சண்டையிட்டு வந்துள்ளார். தனது மனைவிக்கு வேறு ஒருவருடன் திருமணத்திற்கு புறம்பான தொடர்பு இருப்பதாக கவுதம் சந்தேகமடைந்து அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று மனைவியின் தலை வெட்டி எடுத்துக் கொண்டு ரத்தம் சொட்ட அருகில் உள்ள டீக்கடைக்கு சென்று பரபரப்பை ஏற்படுத்தினார். டீக்கடை பெஞ்சில் கடும் கோபத்துடன் அமர்ந்திருந்த கவுதமைக் கண்டு பதறிய அப்பகுதி
மக்கள் அளித்த தகவலின் பேரில், போலீசார் அங்கு சென்று கைது செய்தனர்.

 

Tags :

Share via