"கானல் நீர் பட்ஜெட்" - இபிஎஸ் விமர்சனம்

by Staff / 20-02-2024 01:23:20pm

வேளாண் நிதிநிலை அறிக்கையால் விவசாயிகளுக்கு பலனில்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது பற்றி பட்ஜெட்டில் குறிப்பிடவில்லை; தென்னை விவசாயிகள், இயற்கை விவசாயிகளுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படவில்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார். வார்த்தை ஜாலங்களால் மக்களின் கவனத்தை திசை திருப்பி மக்களை ஏமாற்றும் விடியா திமுக அரசின் நான்காம் ஆண்டு பட்ஜெட் "கானல் நீர் பட்ஜெட்" எனவும் விமர்சித்துள்ளார்.

 

Tags :

Share via