5வது முறையாக ஜாமீன் மனு தள்ளுபடி

by Staff / 28-02-2024 11:45:36am
5வது முறையாக ஜாமீன் மனு தள்ளுபடி

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 5வது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜுன் 14ஆம் தேதி அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, நெஞ்சுவலி ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை 22வது முறையாக, வரும் மார்ச் 4 தேதி வரை நீட்டித்து கடந்த வாரத்தில் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டிருந்தார்.
இதனிடையே செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3 முறையும், சென்னை உயர் நீதிமன்றத்தில் 2வது முறையாகவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கை 3 மாதத்திற்குள் முடிக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

 

Tags :

Share via