மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை ஏற்பு - முதலமைச்சருக்கு நன்றி

by Staff / 17-03-2024 12:41:12pm
மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை ஏற்பு - முதலமைச்சருக்கு நன்றி

68 சமூக மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி அறிவித்துள்ள தமிழ்நாடு முதல்வருக்கு மதுரை மக்களவை உறுப்பினர் சு‌.வெங்கடேசன் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், சீர்மரபினருக்கு DNC & DNT என இரண்டு சான்றிதழ்கள் வழங்குவதற்கு பதிலாக , தமிழகத்தில் DNT என்ற பிரிவின் கீழ் 68 சமூகங்களுக்கு ஒற்றைச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற நீண்டநாள் கோரிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை சட்டமன்றத்தில் வலியுறுத்தி பேசினார்‌ என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via