அழுகிய ஆண் சடலம் மீட்பு: போலீஸாா் விசாரணை
மொளசி காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பலநாயக்கன் பாளையம் பகுதியில் தோட்டத்தில் புதைக்கப்பட்டிருந்த ஆண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருச்செங்கோட்டை அடுத்த மொளசி காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பலநாயக்கன்பாளையம் பகுதியில் காா்த்திகேயன் என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தை சமன்படுத்த கடந்த சில நாள்களாக மண் தோண்டும் பணி நடைபெற்று வந்தது நேற்று அந்த பகுதியில் துா்நாற்றம் வீசியது. சந்தேகமடைந்த காா்த்திகேயன் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த மொளசி போலீஸாா் அழுகிய ஆண் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.
Tags :