உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ45 லட்சம் பறிமுதல்.
அரக்கோணம் அடுத்த புளியமங்கலம் சோதனை சாவடி அருகே தேர்தல் நிலை கண்காணிப்பு குழு செந்தில்குமார் தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது திருவள்ளூரில் இருந்து அரக்கோணம் நோக்கி வந்த காரை சோதனையிட்டதில் உரிய ஆவணங்களின்றி ரூ.45 லட்சம் கொண்டு வரப்பட்டதை பறிமுதல் செய்து வட்டாட்சியர் செல்வியிடம் ஒப்படைத்தனர்.
நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் முதல்முறையாக ரூ.45 லட்சம் பறிமுதல் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் சோதனையில் சிக்கியது. பணம் கொண்ட வந்த காரியிலிருந்தவர்களிடம் விசாரனை நடத்தியதில் தனியார் வங்கிக்கு திருவள்ளூரிலிருந்து கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து வருமானவரி துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு நேரில் வந்து வங்கி அலுவலர்களிடம் விசாரனை நடத்தினார். பின்னர் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பணத்தை பெற்றுக்கொள்ள அறிவுறுத்தினர்.அதனையடுத்து தேர்தல் நடத்தும் துணை அலுவலரும், அரக்கோணம் வட்டாட்சியருமான செல்வி ரூ.45 லட்சத்தை அரக்கோணம் சார் கருவூலத்தில் ஒப்படைத்தார்.
Tags : உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ45 லட்சம் பறிமுதல்....