திருமணமான 45 நாட்களில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள இலுப்பக்குடியை சேர்ந்தவர் மாரி (29). இவருக்கும் முருகன் மகள் செல்வி (22) என்பவருக்கும் கடந்த 45 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் செல்வி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காரைக்குடி அழகப்பாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆர்.டி.ஓ., பால்துரை விசாரணை நடத்தினார். செல்வியின் தந்தை முருகன் செல்வியின் அறையை சோதனை செய்த போது, அங்கு இருந்த ஒரு டைரியில் செல்வி எழுதிய கடிதம் கிடைத்தது. அதில், தனது இறப்புக்கு காரணம் கணவர் மாரி மற்றும் அவரது குடும்பத்தினர் என்று இருந்துள்ளது. இக்கடிதத்தை செல்வியின் தந்தை போலீசாரிடம் ஒப்படைத்தார். அதன் அடிப்படையில், போலீசார் மாரியை கைது செய்தனர்.
Tags : புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை