சூர்யா,ஞானவேல்ராஜா மீது தென்காசி கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாமக-வினர் புகார்

by Editor / 19-11-2021 03:48:22pm
சூர்யா,ஞானவேல்ராஜா மீது  தென்காசி கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாமக-வினர் புகார்

 நடிகர் சூர்யா தயாரிப்பில் வெளியான  ஜெய் பீம் திரைப்படத்தில் தமிழ் நாட்டில் பெரும்பான்மை சமுதாயமான வன்னியர் சங்கத்தை அவமதிக்கும் வகையில் ஜெய் பீம் திரைப்படத்தை திட்டமிட்டு தயாரித்து ஓடிடி-யில் வெளியிட்டுள்ளார்கள். 

சினிமா படைப்பு என்பது சமூகத்தில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்க வேண்டும், சமூக நல்லிணக்கத்தை சீர் குலைக்காமல் இருப்பது ஒவ்வொரு கலைஞரின் தார்மீக கடமையாகும். ஆனால் ஜெய் பீம் திரைப்படம் சமுதாயத்துக்குள் வன்முறையை தூண்டும் வகையில் திரைப்படத்தை உருவாக்கி உள்ளனர் எனவே வன்னியர் சமுதாயத்தை இழிவுபடுத்தி சமுதாயத்திற்குள் வன்முறையை தூண்டும் வகையில் திரைப்படத்தை உருவாக்கிய தயாரிப்பாளரும் நடிகருமான சூர்யா மற்றும் இயக்குனர் ஞானவேல் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

 

Tags :

Share via