மர்ம நோயால் 18 பேர் உயிரிழப்பு

by Staff / 28-01-2023 11:33:58am
மர்ம நோயால் 18 பேர் உயிரிழப்பு

நிதி நெருக்கடி மற்றும் அதிக பணவீக்கத்தில் தத்தளித்து வரும் பாகிஸ்தானில் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வருகிறது. சமீபத்தில் கராச்சி அருகே கெமாரி பகுதியில் மர்ம நோயால் பாதிக்கப்பட்ட 18 பேர் உயிரிழந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் என உள்ளூர் மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர். இவர்கள் அனைவரும் இறப்பதற்கு முன் கடும் காய்ச்சல், தொண்டை வீக்கம், மூச்சு விடுவதில் சிரமம் ஆகியவற்றால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த திடீர் பிரச்சனையால் அந்நாட்டு மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

 

Tags :

Share via