பழனி ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

by Staff / 23-03-2024 12:18:23pm
பழனி ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

பழனி ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி ரயில் நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக காவல்துறை அலுவலகத்திற்கு வந்த இ-மெயில் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.   50 க்கும்  மேற்பட்ட  போலீசார், வெடிகுண்டு  நிபுணர்கள் ரயில் நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மோப்பநாய் உதவியுடன் ரயில் நிலையம் முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

பழனியாண்டவர் திருக்கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் அதிகளவில் வருகை தரும் நிலையில், திடீர் வெடிகுண்டு மிரட்டல்   மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

Tags :

Share via