மாணவி தற்கொலை போலீஸ் விசாரணை

by Staff / 26-03-2024 01:41:02pm
மாணவி தற்கொலை போலீஸ் விசாரணை

விழுப்புரம் ஜி. ஆர். பி. , தெருவைச் சேர்ந்தவர் கலைவாணன் மகள் ஜெயசூர்யா, 14; இவரது தாய் இறந்து விட்டதால் பாட்டி கண்ணகி வீட்டில் தங்கி விக்கிரவாண்டி அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார்.இவர், கடந்த 23 ம் தேதி காலை 8: 00 மணி அளவில் வீட்டில் துாக்குப் போட்டுக் கொண்டார். உடன் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஜெய்சூர்யா சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை 3: 00 மணிக்கு இறந்தார்.அவர் தற்கொலை செய்த கொண்டதற்கான காரணம் குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via