போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த கணவன்.. மனைவிக்கு அரசு வேலை நீதிபதி உத்தரவு

by Staff / 26-03-2024 04:28:20pm
போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த கணவன்.. மனைவிக்கு அரசு வேலை நீதிபதி உத்தரவு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த ஓட்டுநர் முருகன் மனைவிக்கு அங்கன்வாடி பணி வழங்க தென்காசி ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஓட்டுநர் உயிரிழந்த வழக்கை நெல்லை மாவட்ட சிபிசிஐடி எஸ்.பி. கண்காணிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கிராம உதவியாளர் பணியிடம் காலியாகும் வரை அங்கன்வாடி பணியாளர் பணியை வழங்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

 

Tags :

Share via