டீ போட்டுக் கொடுத்து வாக்கு சேகரித்த அமைச்சர்

by Staff / 29-03-2024 01:55:12pm
டீ போட்டுக் கொடுத்து வாக்கு சேகரித்த அமைச்சர்

விழுப்புரம் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் விசிக வேட்பாளராக ரவிக்குமார் எம்.பி., மீண்டும் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் வாக்கு சேகரித்து வருகின்றனர். அந்த வகையில், மரக்காணம் பேருந்து நிலையம் அருகே உள்ள கடைத்தெருவில், விசிக வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து இன்று, தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வாக்கு சேகரித்தார். அப்போது அங்கிருந்த பேருந்து நிலைய டீ கடையில் தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுமக்களுக்கு டீ போட்டுக்கொடுத்து வாக்கு சேகரித்தார்.

 

Tags :

Share via