திருப்புல்லாணி கோவிலில் ரூ.1 கோடி நகைகள் மாயம்

by Staff / 30-03-2024 01:41:21pm
திருப்புல்லாணி கோவிலில் ரூ.1 கோடி நகைகள் மாயம்

திருப்புல்லாணி கோவிலில் ரூ.1 கோடி மதிப்புள்ள நகைகள் மாயமாகி உள்ளதாக காவல் துறையினர் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஆதிஜெகன்நாத பெருமாள் கோவிலில் சுமார் ஒரு கோடி மதிப்பிலான நகைகள் மாயமாகியுள்ளன. சமஸ்தான தேவஸ்தானத்தின் திவான் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார். கோவிலின் பெட்டகத்தை வைத்திருந்த ஸ்ரீனிவாச ஐயங்காரிடம் சமஸ்தான தேவஸ்தானத்தின் திவான் பழனிவேல் பாண்டியன் கேட்டபோது, இரு வாரத்தில் பதில் அளிப்பதாக கூறியுள்ளார்.இரண்டு வாரங்கள் கடந்த நிலையில், அவர் பதில் அளிக்காததால், போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via